Search This Blog

Wednesday, December 25, 2013

திருஅருட்பிரகாச வள்ளலார் திருச்சந்நிதி முறையீடு - 2. சரணமஞ்சரி - தொழுவூர் வேலாயுதனார் இயற்றியது


அருட்பெருஞ்ஜோதி    அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை   அருட்பெருஞ்ஜோதி

சந்நிதி முறையீடு: 

இராமலிங் கச்சுடர் ஏற்றுபு நோய்செய்என் தொன்மைமலம்
இராமலிங்(கு)அண்ணிய புன்மைஉ ளம்விளக் கூஇடும்பை
இராமலிங் கன்எடுத்(து)உட்படுத்(து)ஆண்ட எழிற்கருணை
இராமலிங் கக்குரு ராயன்நல் பொன்னடி என்முடியே.  (1)

3. சரண மஞ்சரி

1.

மாரசந் தாப சரணம், மாதுபங் காள சரணம்,
மாயசம் போதி சரணம், மாலென்அம் பேவி சரணம்,
காரணங் காதி சரணம், காலமுந் தேக சரணம்,
காயமின் றாதி சரணம், காணரும் போத சரணம்,
ஆரணம் தேடி சரணம், ஆகமம் கூறி சரணம்,
மாசரும் வேதி சரணம், ஆவிசஞ் சீவி சரணம்,
நாரமுஞ் சூடி சரணம், நாசமுங் கீறி சரணம்,
ராமலிங் காய சரணம், ஞானபண் டீத சரணம்.!  (2)

ஆடுறும் பாத சரணம், ஆதிகங் காள சரணம்,
ஆலினன் றோது முடிபின் சோதியென் தாதை சரணம்,
வாடுறும் போதின் எனையும் வாவெனும் சீத அருளின்
வாறென் என் றோத அடியன் பாடுறும் பாடல் பரிசின்
ஈடரும் பாத சரணம், ஏதுநன் றாதி சரணம்,
ஏழையென் மோக சரணம், ஏரகம் வாச சரணம்,
நாடரும் பீடி சரணம், நாரிசிங் கார சரணம்,
ராமலிங் காய சரணம், ஞானபண் டீத சரணம்.!   (3)

மானுறுங் கோல சரணம், மாணுறும் சீல சரணம்,
வாதறும் போதம் அதனின் வாழுறும் பாத சரணம்,
ஊனறும் யோக நிலையும் தானரும் பாத சரணம்,
ஊசல்நின் றாடும் மனதில் ஊடரும் சீர சரணம்,
வானுறும் காலும் அறலும் தீமணும் போதும் உயிரும்
மாறரும் பானும் மதியும் ஆனஎண் தேக சரணம்,
நானறும் கால நணுகும் நானுறும் வேலை யகலும்
ராமலிங் காய சரணம், ஞானபண் டீத சரணம்.!   (4)

ஈனசஞ் சார மதினின் றூனசெஞ் சோரி உடலம்
தானரும் பேற(து)எனுமென் ஈனபுன் சோகமதியின்
றேநலிந் தோட, அருளின் வானறும் யாறு புவியின்
பானநும் காலின் உறலின், யானெனும் போத முடிவின்
தூநறும் சீத சரணம், யானணிந்(து)ஓத முடியின்
மேனடும் போது மரணம் தூரநின் றோட மிகவும்
நானிலங் காண வெளியின் மானிடம் சூடும் நிபுண
ராமலிங் காய சரணம், ஞானகம் பீர சரணம்.!   (5)

கூறரும் தியாக சரணம், கோலமன் றாடி சரணம்,
கோதைசெம் பாதி சரணம், கூடலின் சீல சரணம்,
வாறரும் போக சரணம், மானிசன் மான சரணம்,
மாலினின் றோடி சரணம், மாசரும் சோதி சரணம்,
பாறுமுன் பாட நடவும் பாவலங் கார சரணம்,
பாடரும் பாட சரணம், பாலினின் றேன சரணம்,
நாறுபுன் தோகம் உயிரும் நாடுசெந் தாது கவரும்
ராமலிங் காய சரணம், ஞானகம் பீர சரணம்.!   (6)

சோமசிங் கார சரணம், தோழவென் றாய சரணம்,
தூயசெஞ் சோதி சரணம், சோதிசெஞ் சோதி சரணம்,
மாமனென் றோடி சரணம், வாதுநின் றாடி சரணம்,
மாலயன் தேடி சரணம், மாமகம் சாடி சரணம்,
தாமவண் டார சரணம், சாதமுஞ் சூதம் உறலும்,
தானறும் வாழ்வு தருமென் சாமிஎன் சாமி சரணம்,
நாமமந்த் ரேச சரணம், நாடரும் தேச சரணம்,
ராமலிங் கேச சரணம், ஞான சம்ப்ரேச சரணம்!  (7)

தாயகஞ் சாமி நினதின் றாவரும் பாத மலரென்(று)
ஆவல்கொண்டார்கள் பணியுந் தாமவண்டாய சரணம்,
சாயகந் தூய அரியென் றேபுரஞ் சாடு நகையின்
பாவகம் பேசு மதுவும் சாருன்என் போதவளவன்
நேயகம் வாடும் அளியன் பாலுமிங் கேது புரியும்
வாறதென் றாதை சரணம், ஈறில்சந் தோட சரணம்,
நாயகம் வேற துளதென்(று)ஓர்விலன் காணி சரணம்,
ராமலிங் காய சரணம், ஞானபண் டீத சரணம்.!   (8)

மூலமந்த் ராய சரணம், மோடியெண் டோளி உருகும்
மோகடம் பாய சரணம், மோதகந் தாய சரணம்,
சீலதந்த் ராய சரணம், தேஜமுண் டாய சரணம்,
தேவசிங் காய சரணம், சீத சிந்தாய அறிவின்
பாலசந்த் ராய சரணம், பாவசம் வாயி சரணம்,
பாகசம் யாம சரணம், பாபசங் கார சரணம்,
ஞாலமிந்த் ராதி பரவும் நாகபந் தாய சரணம்,
ராமலிங் காய சரணம், ஞானசம் வேத சரணம்.!   (9)

பாசபஞ் சார வரமும் பாறும்அஞ் சாய தொழிலும்
பாரில்விஞ் சாத வணமுன் பாடுகின் றார்கள் எவரும்
மோசநந் தான துறவந் தாளுமென் சாமி சரணம்,
மூடனென் கோது முழுதும் சாடுசெம் பாத சரணம்,
வாசகம் போய ஒருநன் மாதுரந் தோயு நிபுண
மாநடந் தேரும் உகள வாரிசம் போத சரச
ராஜசங் கூடி ஒளிரும் தேவநந் தேவ சரணம்,
ராமலிங் காய சரணம், ராமலிங் காய சரணம்!      (10)

நாகர்மண் தேயர் கனக நாடர்வந்(து)ஏதம் அகல
நாடிநின் றார்கள் பணியு நாசநஞ் சாதி சரணம்
மோகமங் காரு மதியின் பால்அகன் றேயு நிதமும்
பூரணம் சோதி எனவும் மூசரும் பேர சரணம்,
சோகமிங் கேதும் எனைநின்(று)ஆளுறும் வாற தறவின்
றேவிரைந் தோடிமுடியின் சூடுறும் பாத சரணம்,
நாகநின் சீரை முழுதும் பாடவென் றால தருளும்
ராமலிங் காய சரணம், ராமலிங் காய சரணம்!      (11)

மாடகம் போக மனையும் மாயமங் கேது முடிவின்
மாசதின் றாய திறைவன் மாணுறும் பாதம் எனமண்
வாடகந் தேடி உழலும் வாரநெஞ் சோடி புகுதும்
மாதிடம் கோளி சரணம், வாதிடும் காளி மயலும்
நாடகம் தூய வெளிநின் றாடி சங்கேத சமயம்
நாடரும் வேதமுடியின் பீடுறும் பீட சரணம்,
ஏடகம் காழி வடலூர் ஏரகம் வேத கிரியும்
ஏமமன் றோடு மருவும் ஈச நந்தீச சரணம்! (12)

பாதமந் தார மருதம் சோகபுன் னாக வகுளம்
பாடலங் கோளி பனசம் தாலமஞ் சாடி படிகம்
சூதவங் கோல துருமம் சாகசஞ் சாளி விரவும்
சூழனந் தாதி புரியின் மாதுசெம் பாதி சரணம்!
கேதசந் தேக திரிபும் மூடமும் வாதும் ஒருவும்
கேடரும் போதம் அருளும் கேள்வியங் காதி சரணம்
 நாதமும் வேத முடிவும் ஞானமும் யோக நிலையும்
நானதும் போய ஒருநன் னாயகம் தூய சரணம்!    (13)

ஞானபண் டீத சரணம், நாகர்தம் வாழ்வு சரணம்
நாதவிந் தோடு கலையென் னாடகன் றாடி சரணம்,
மோனசிந் தாதி சரணம், மூவலின் றாதி சரணம்,
மோனிசிந் தாய சரணம், மூதகண் டாய சரணம்,
வானசிந் தாய சரணம், மாகதம் பாய சரணம்,
மாயுரம் வீர சரணம், வாலைதன் பால சரணம்,
தீனபந் தாதி சரணம், சேவல்அம் தோகை உயரும்
சீரசெந் தூர சரணம், தேவநந் தேவ சரணம்! (14)

வேறு
சிந்தா மணியே சரணஞ் சரணம்,
திருவே மருவே சரணஞ் சரணம்,
கந்தா கனியே சரணஞ் சரணம்,
கதியே மதியே சரணஞ் சரணம்,
எந்தா யிறையே சரணஞ் சரணம்,
இனியாய் தனியாய் சரணஞ் சரணம்,
முந்தா முறையே சரணஞ் சரணம்,
முனியே கனியே சரணஞ் சரணம்! (15)

வேறு
வட்டமான வம்பு முலையும் இட்டசோதி பைம்பொன் அணியும்
வைச்சகாதி லங்கு குழையும் பட்டுலாவு கொந்தளகமும்
ஒட்டியாண பந்த விடையும் உற்றதாம சந்த மணியும்
உத்தரீய தொங்கல் அதுவும் உச்சிமேவும் அந்தபதமும்
..ட்டரான அன்பர் உளமும் ஒக்கவாட முன்பு புரியும்
அத்ததாள மங்கை மகிழ்ஞ்சித்தவேட மொன்றி சரணம்,
நட்டுளார்கள் நம்ப சரணம், நச்சுநாயென் நெஞ்சில் சரண
நட்டராம லிங்க சரணம், நட்டமாடு சம்பு சரணம்! (16)

சுட்டிலாத வெந்தை சரணம், துக்கமான சிந்தி சரணம்,
தொக்கநேய மைந்தர் மனமும் சுத்தவேத அங்க முடியும்
மட்டுலாவு கஞ்ச சரணம், வைத்தெனாசு பந்த விபுலம்
வைத்திடா திகழ்ந்து நிதமும் மத்தனேனை வந்து பருவம்
பட்டகாலம் இங்கு சிறிதும் பற்றுறாது பண்பு பலவும்
பக்ஷமோடு மின்று பகலின் பக்கமேபு ரிந்து வலியும்
அட்டமான விம்ப சரணம் அத்தராம லிங்க சரணம்,
அத்ததாள நங்கை மகிழும் அற்புதாவ கண்ட சரணம்! (17)

சிரித்தெயில்க ளெரியும் படிக்கவுரை மலையுந்
தெரித்தசிலை யெனமுன் வளைத்தகர சரணம்
விரித்தமுது மறையும் படிக்கரிய புகழ்மென்
பதத்தையொரு குறளின் வெரித்தலையி னுலவும்
பொருத்தமது புரியுங் கருத்தசய சரணம்
புனிற்றுமறி விழிபங் கொருத்தசய சரணம்
நெரித்துவிற லவுணன் வருத்தமுற நிறுவும்
நிருத்தபத சரணம், நிருத்தசய சரணம்! (18)

வடித்தபழ மறையின் சிரத்தினட னவிலும்
விருத்தசய சரணம், வரித்தவுல கெவையும்
படித்தபுகழ் முழுதுந் துதிக்கவர முதவும்
பழுத்ததமிழ் விரவும் பயத்தமுலை யொருபெண்
கொடிக்கினிய சரணம், கொழுத்தமலர் புனையுங்
குடிக்குமொரு முதலென் குலத்தொடெனை முழுதும்
நடித்தகழன் முறிகொண் டெழிற்கனக சபையில்
நடித்தபத சரணம், நடித்தசய சரணம்! (19)

கனத்ததன சிவசங் கரிக்குமகிழ் வரவெங்
கணத்தொகுதி யுடனம் பலத்தினடு பணியுஞ்
சினப்புலியி னடிசெம் மனத்தவனு முருகுஞ்
சிறப்பினிய றகுசெஞ் சணுக்குசணு சணுதந்
தனத்ததன தனதந் தனத்ததன தனதந்
தகுக்குதகு தகுதிந் திமித்திமிதி மிதிதிந்
தினச்செகுகு செகுசெஞ் செணுக்குசெணு வெனமுன்
றிருத்தநட நவிலும் பதத்தசய சரணம்! (20)



வேறு

தேடிய வேதா தருவின் கிழவன்
சேயிதழ் மேலார் மகளின் கொழுநன்
தேவரு நாலா மறையும் புகழுஞ்
சேவக மூலா வொருவம் பலகின்(று)
ஏடியல் பூவார் குழலின் விழிசெஞ்
சேலது வோடா வுகளின் பவெளம்
ஈடற மீதே பெருகும் படியன்
றேவரு மாரா வகையின் முழுகும்
தாடன தாதா தனனந் தனனந்
தாதகு தீதீ செகுசெஞ் செகுசெந்
தாதிமி சேசே தகுதந் தகுதந்
தானன தானா தனனந் தனவென்(று)
ஆடிய பாதா சரணஞ் சரணம்,
ஆரிய நாதா சரணஞ் சரணம்,
ஆகம போத சரணஞ் சரணம்,
ஆளுடை யாதா சரணஞ் சரணம்! (21)

வேறு

மாயசஞ் சார சனனம் மரணம்,
வாதைவந் தாரு நெறியின் றொருவும்
வாய்மையிங் கேழை பெறவுந் திருவும்
வாழ்வுதந் தாளி னியலும் படிநல்
 நேயவன் பானகடலின் முழுகும்
நீததொண் டேசெய் பவர்தங் குழுவின்
ஈசனென் கோது கழுவுந் தரமன்
றாகவுந் தான துறவந் தருளும்
ஞாயமின் றேது மறியன் பெரியன்
நாதநின் சேதி சிறிதன் றதுவும்
 நானுமங் கோது மெனதுந் தணவும்
போதுமென் றோசொல் தெரியும் மெனவின்(று)
ஆயசங் கேத வுளவிங் கருளும்
ராமலிங் காய சரணஞ் சரணம்,
ஆதனென் றாதை சரணஞ் சரணம்,
ஆடுசெம் பாத சரணஞ் சரணம்! (22)

ஓடு நீரொ டங்கி காற்று
சோதி யோடி ரண்டு சாற்றும்
ஓசை வான மண்சு கார்த்தம்
ஓதும் ஆத னென்று காட்டும்
நீடு நாலி ரண்டு நோக்க
கோல மாயி ருந்த தீர்த்த,
நீல னாக வந்து சாத்து
நேய மாய சம்பு போற்றி,
வேட னூனை யுண்ட வாத்த,
வேதி யாவெ னண்ட போற்றி,
வேத மாசி லம்ப போற்றி,
வேணி மீதி லம்ப போற்றி,
ஆட லேறு கந்த காட்சி
ஆரி யாவெ னன்ப போற்றி,
ஆளி ராம லிங்க போற்றி,
ஆடு பாத நம்ப போற்றி. (23)

வேறு

கரைத்தெனா னான மூர்ச்சை
கருத்தினா தேச நீத்து
கணிப்பிலா சாசை வாட்டி
யிருத்துபா தாய போற்றி,
உரைத்துநா வாலு மாட்டாப்
பெருத்தவா னாதி போற்றி,
ஒருத்தனா யாது மாக்காத்
திருத்தசீ பாத போற்றி,
இறைத்தமா வாரி தீர்த்தம்
இருக்கும்கோ டீர போற்றி,
இசைக்குமா வேத வாக்கு
விரித்ததா ளாள போற்றி,
நிரைத்தமா யாச கார்த்த
நிறுத்துகோ லாய போற்றி,
நிருத்தரா சாய போற்றி,
நிருத்தபா தாய போற்றி! (24)

அருட்பெருஞ்சோதி    தனிப்பெருங்கருணை.


-  தொழுவூர் வேலாயுதனார் இயற்றியது.

No comments:

Post a Comment