Search This Blog

Monday, July 21, 2014

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது வேலூர் பத்மநாப முதலியார் பாடிய "சற்குரு வள்ளலார் போற்றிகள்" .

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது வேலூர் பத்மநாப முதலியார் பாடிய 

"சற்குரு வள்ளலார் போற்றிகள்" .


திருவளர் வடலூர் செழும்பதி யமர்ந்த

உருவளர் ஞான வொளியே போற்றி

யான்செயும் பிழைகள் யாவுநீ பொறுத்துன்

தேன்செய் பதாம்புயஞ் சேர்த்தருள் போற்றி

போதவா னந்த பூரண்னே யெனக்

காதரவாகி வந் தருளுக போற்றி

என்னையும் பொருளா வேற்று நின்பாத

சன்னிதி வைத்தருள் தாயே போற்றி

நின்பத நேய நிலைஇய வென்னைச்

சன்மார்க் கத்திற் சார்த்துக போற்றி

சற்குரு ராய தயாநிதி போற்றி

எற்கிரு ளொழித்த விறையே போற்றி

போற்றி போற்றிநின் புனைதரு மடிமலர்

போற்றியென் னூட்டடம் பூத்து வாழியவே.

- வேலூர் பத்மநாப முதலியார்.

No comments:

Post a Comment