Search This Blog

Monday, July 21, 2014

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது திரிசிரபுரம் மா. லோகநாதர் பாடிய "சற்குரு வள்ளலார் துதிகள்" .


திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது 

திரிசிரபுரம் மா. லோகநாதர் பாடிய 

"சற்குரு வள்ளலார் துதிகள்" .



பவக்கடல்கடந்து கரைபெறா துழலும் பாவியேன்றனையதிற் சேர்க்கத்
தவக்கடல் லனையார் புகழ்தருந் சார்புதந் தருளுதற் பொருட்டே
அவக்கடல் கடத்தி யருள்வடலூரில் லமர்குரு ராமலிங் கப்பேர்
எவக்கடல் கடந்து மெங்குருராய னிருசர ணென்றும்வாழ்த் திடுவாம்.
உலகினி லெவரு மலகிலா விறும்பூ துறப்பல வற்புதங் கட்டி
நிலவுறீஇ யொளிரு மறைமுடிவாழ்க்கை நீத்தெமை யாளுதற் பொருட்டு
குலவுமா நிலத்தின் மானிட வுருக்கொள் குருமணி ராமலிங் கப்பேர்
இலகுசன் மார்க்கத் திறையடியென்ற னிதயத்தி லென்றும் வாழியவே

- திரிசிரபுரம் மா. லோகநாதர்

No comments:

Post a Comment