Search This Blog

Monday, July 21, 2014

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது பெங்களூர் இராகவலு நாயகர் பாடிய "சற்குரு வள்ளலார் துதிகள்" .

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது 

பெங்களூர் இராகவலு நாயகர் பாடிய 

"சற்குரு வள்ளலார் துதிகள்" .



மாநில வரைப்பிற் பிறவிபற் பலவா முற்றவற் றரிதுமா னிடமென்
றீனுல குரைக்கு மதிலுயிர்க் குறுதி யெய்துத லரிதென்ப ரெனயுந்
தானெரு பொருளா வெடுத்தினி தாண்டு தரைமிசைச் சுத்தசன் மார்க்க
மேனிலை வைத்த சற்குரு மணியின் வியநிலை யுரைத்திட லரிதே.
சேலறா வயல்சூ ழுத்தர ஞான சித்திபுரத் தனி வாழ்க்கை
சாலறாச் சுத்த சமரச ஞான தயாநிதி யடியனே னுளத்தின்
பாலறா தோங்கும் இராமலிங் கப்பேர்ப் பகரருங் குருசிகா மணிதன்
வாலறாப் பாரத யுகளதா மரையென் மனத்தட மலர்ந்துவா ழியவே.

- பெங்களூர் இராகவலு நாயகர்.

No comments:

Post a Comment