Search This Blog

Wednesday, December 25, 2013

தசபங்கி - திருஅருட்பிரகாச வள்ளலார் திருச்சந்நிதி முறையீடு - 4- தொழுவூர் வேலாயுதனார் இயற்றியது


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி




சதபங்கி என்பது ஒரு பாடல் போல இருக்கும் ஆனால் அது நூரு பொருளை தரும், அதுபோல

தசபங்கி என்பது ஒரு பாடல் போல இருக்கும் அது பத்து பொருளை தரும், தசபங்கியை இங்கு

வெளியிட்டுள்ளோம் சத பங்கி கிடைக்க வில்லை.

சத பங்கிக்கு உரை காணும் பொருட்டு சில தமிழ்ச் சான்றோர்களை அணுகினோம்,

ஆனால் இது மிகவும் இலக்கண கடினம் உடையதாக அவர்கள் தெரிவித்தார்கள்,

தமிழக இலக்கிய வரலாற்றில் இப்படி ஒரு நூல் செய்யப்பட்டது இல்லை என்றும்,

வள்ளல் பெருமானாரின் மீது கொண்ட பற்றே தொழுவூர் - வேலாயுத முதலியாரை இவ்வாறு

பெருமானார் மீது மிக உயர்ந்த இலக்கியங்களை செய்ய தூண்டியது என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.

இதன் உரை விரைவில் வெளிப்பட பெருமானார் அருள் புரிவாராக!
====================

தசபங்கி

கட்டளைக் கலிப்பா

1 வெண்ணிலாவே தீயைவீசும் மீனம்முயர்த் தோன்

       விரைந்த செய்கை மேனந்திய

எண்ணமேதோ பாயிளங்கா றானண்ணி வண்ணம்

      புரைந்தம் மேனிவானம் பெறு

புண்ணதாக் கன்னோய் விளைத்தக் கோன்மன்ன

      பொன்னைப் புரிந்து நேரா மானம்வடல்

நண்ணியே யாய்வதென்னா நானென்ன செய்வன்

      பரிந்தேவாழி வாநம் பியே.

வஞ்சித் துறைகள்
2 வெண்ணிலாவே எண்ணமேதோ புண்ணதாக்க நண்ணினாயே

3 தீயைவீசும் பாயிளங்கா னேய்விளைத்த ஆய்வதென்னாம்

4 மீனம்முயர்த்தோன் றானண்ணிவண்ணம் கோன்மன்னபொன்னை

நானென்னசெய்வன்

5 விரைந்தசெய்கை புரைந்தம்மேனி புரிந்துநேரா பரிந்தேவாழி.

6 மேனந்தி வானம்பெறு மானம்வடல் வாநம்பியே.


வஞ்சி விருத்தம்
7 வெண்ணிலாவே தீயைவீசும் எண்ணமேதோ பாயிளங்கால்

புண்ணதாக்கன் னோய்விளைத்த நண்ணினாயே யாய்வதென்னே.

நேரிசை வெண்பா
8 வெண்ணிலாவே தீயைவீசும் மீனம் முயர்த்தோன்
எண்ணமேதோ பாயிளங்காறா - னண்ணிவண்ணம்

புண்ணதாக்கன் னோய்விளைத்தக் கோன்மன்ன பொன்னை

நண்ணினாயே யாய்வதென் னாம்.

வஞ்சி விருத்தம்
9 விரைந்த செய்கைமே னந்திய புரைந்தமேனி வானம்பெறு

புரிந்துநேரா மானம்வடல் பரிந்தேவாழி வாநம்பியே.

கட்டளைக் கலித்துறை
10 வெண்ணிலாவே தீயைவீசும் மீனம்முயர்த்தோன் விரைந்த

எண்ணமேதோ பாயிளங்கா றானண்ணிவண்ணம் புரைந்த

புண்ணதாக்கன் னோய்விளைத்தக் கோன்மன்ன பொன்னைப்புரிந்து

நண்ணினாயே யாய்வதென்னா நானென்ன செய்வன் பரிந்தே.



                                                                            - தொழுவூர் - வேலாயுத முதலியார்.

No comments:

Post a Comment