Search This Blog

Sunday, August 13, 2017

தொழுவூர் வேலாயுதனார் வள்ளலார் மீது பாடிய "நம சங்கீர்த்தனம்"

6. நம சங்கீர்த்தனம்

அருட்பெருஞ்சோதி    தனிப்பெருங்கருணை

திருத்தகும் ஆரண வாகம சிரத்தொளி யேவெளி யேயென
தியக்கற வாயுரை நாடரு சிறப்பினெர் மானிட நாடக
வுருத்திகழ் காரண நேயர்க ளுளத்தனி யாலய மேவிய
வுருக்க வலாயறி யாவறி வொளிக்கவ லாயெனை யாளென
இருத்திய வானவ ரேமுத லெவர்க்குமொ ணாவிய லார்பணி
யெனக்கென வேபொது வோவுற விசைத்திடு பாதந மோநம
அருத்தியி னோர்மட வாண்மகி ழறத்தனி மால்விடை யாய்நம
வருட்பிர காசந மோநம அருட்பிர காசந மோநம. (1)

வழக்கர்க ளாமறு வோரவர் மருட்டிகழ் பாசக வாசக
மதித்தவ மேபெறு நாள்கழி வழக்கற வேதன தாளிணை
முழுக்குறு சீரது வேபுனை முழுத்தவ ரேவலை யேநித
முயற்றுற வோர்மதி யேவர முளைத்தவெ னாதந மோநம
விழுக்கறு காரண காரிய மிசைக்கறி யாவடி வாயுல
கெவைக்குமொர் தாயக மாகிய விணைப்பத தாமரை நாண்மலர்
அழுக்கடை பேதையே னோர்முடி யமைத்தருணாளுமெ தோவினம்
அருட்பிர காசந மோநம அருட்பிர காசந மோநம. (2)

மலத்துழ லோர்சிறு கீடம தெனத்தகு பேதையை வாவென
மயக்கறு சீரடி யேபுனை வளப்பணி யாளர்கு ழுஉவிடை
விலக்கற வேயிரு நாமுனை விடுக்கில மேலினி வீணினின்
மிகுத்தலை யேனிலை வாயென விதித்தவ னேவினை யேனுள
நலத்தனி யாலய னேமறை நவிற்றரு சோதியெ னாயக
நகக்கொடி மாதர சாரணி நயத்தணி பாதித யாநிதி
அலக்ககெண லாமறு மாறரு ளறத்தனி வானவ னேநம
வருட்பிர காசந மோநம அருட்பிர காசந மோநம. (3)

குணக்கிது மேல்குட பாலிது வெனத்தெரி யேனெரு நாயது
குணத்தினு மேகடை யாகிய வெனக்கிணை யேனையு மோர் பொருள்
கணக்குசெய் வாய்புல வோரொடு கருத்தற வேநினை யேநினை
கவற்றிரு வாளர்கண் ஞானியர் கணத்திடை யாயவர் தாமெண
இணக்குறு சீரிது தானுற விசைத்தரு ளேதெது தானெனில்
எணிக்குணி மாறுள தோவுன தியற்புக ழோபெரி தாரிய
அணக்குறு வார்சுர ராதிய ரருட்கடை சேரிய நெடுபு
அருட்பிர காசந மோநம அருட்பிர காசந மோநம. (4)

எனைத்தெரி யேனெனை யோர்பொரு ளெனக்கொடு மாலலர்மேலய
னெனப்படு வார்பெரி யாரவ ரியற்கரி தாகிய சீரடி
தனித்துணை யேயுறு மாரியர் தவத்துறு வாயென வேவலி
தவக்கனி யேயுண ரேனின நினற்றிரு வாரரு ளோரியல்
மனித்தருள் போலிய னாதலின் மதித்தறி யேனருள் வாய்மையை
மயக்குறு வேனவ மேயினி வழக்குள வோசிவ னேசிவ
அனித்தமெ லாமற மானிட மணித்தவ னேயரு ணாசல
அருட்பிர காசந மோநம அருட்பிர காசந மோநம. (5)

வடித்தனி வேல்கொடு மாமலை மதத்தனி மாமுக னாசற
மலைத்தவ னேமலை யாளர்கள் வளர்த்தவ ளாசைய னேகுக
குடித்தெழு வாரிநி னாதருள் குளித்தவ மாமுனி யாரிய
குணக்கட லேகொடி யேனெரு குடிக்கிறை யேகுர வாவெனப்
படித்தில னேரினி னோர்புகழ் படிற்றுழல் வேனவ மேயெனில்
பகட்டிறை யாள்வரி னாருயிர் பதைத்திடு மேயென
நோவதென்
அடிச்சிறு நாயனை யேனினி யருட்படி யாகப ராபர
அருட்பிர காசந மோநம அருட்பிர காசந மோநம. (6)


படைத்திடு வானறி யாநெடு முடிச்சடை மேலர வோடொளி
பனிச்சிறு மாமதி பாதியை பழிப்பற வேபுனை வாயெனில்
விடைத்தனி கேதன னேயெனை மிறைப்படு போதையெ னாவெணி
விடப்படு மோவடி நீழலி லொதுக்கிட மேபெறு மேபல
கடைப்படு வேனிசை யேனுடல் கதிக்கிசை வாய்சில வோர்பகல்
கருத்துனி னாலும் தாவகை கணித்தறி வாயிசை யாதன
அடைத்திட லாரருளாவன வமைத்தரு ளாரிய நாயக
அருட்பிர காசந மோநம அருட்பிர காசந மோநம. (7)  

மறத்தொழி லோவரு மாமதில் வளர்த்தெழு தீயிடை வேவுற
மதித்தொரு மூவரை யேவல்கொள் வளத்தவ னேமலை
யாண்மகிழ்
திறத்தவ னேகரு ணாலய திகைப்பற வானிழன் மேவுபு
திருத்தவர் நால்வர்க ளாசறத் திருச்செவி யாரவு ணாவருள்
குறக்கொடி மாமவி மாசல குலத்திறை யோர்மரு காவென
குடிக்கொரு மாமுத லேயெமுள் குடிக்கொளு வாய்சிவதாசிவ
அறத்தனி நாததி லாபுரி யருட்பொது வாளந மோநம்
அருட்பிர காசந மோநம அருட்பிர காசந மோநம. (8)

கயற்கடு வேல்பழி நீல்விழி கனித்துவர் வாய்மட வார்முலை
கலிற்றலை நோவுற வேவிடி படப்படு மோவின மேல்வரு
துயர்க்குளெ லாமர சாகிய சொலப்படு சாவெனு மோர்பகை
துணுக்குற வேவரு நாளினிற் றுணைப்படு வாருள ரோபுவி
யியற்பல பேதமெ லாமெணி யிடர்ப்படு வேனல தாசற
விணைப்பரு சீரடி யோர்புக ழினைத்தொழு மாறெது வோமலர்
அயற்கரு மாமறை யோடுந லரிக்கரி யாயெளி யாயெமக்(கு)
அருட்பிர காசந மோநம அருட்பிர காசந மோநம. (9)

விரித்தனை மாமறை யாகமம் விதித்தனை யாருயிர் யாவையு
மிகுத்துயு மாறரு ளாயினும் விழற்கொடி யேனுண ரேனதைத்
திரித்தன னாய்மன மோடுபு தெருக்கடை யேயுழல் வேனொரு
சிறுத்தபு லாதிக ளேயுறச் சிரித்தகு பேதையெனாயிடில்
தரித்தன யேமதி யோடுபுல் சலத்தவ மாமக ளோடுறத்
தவப்பய னேதமி யோர்பிழை தனைக்குறி யேலுடையாய்சிவ
அருட்டுறை யாயற வாழிய வறத்தனி நாயகி நாயக
அருட்பிர காசந மோநம அருட்பிர காசந மோநம. (10)


வேறு

பிணிப்புறு மூல ஆணவப் பெயர்ப்புற வேத மோதுபு
பிணக்குறு பேத வாதியர் பிதற்றது நாடி யேயுழல்
வணத்தெனை  நேடி வாவென வலித்தென தாவி யோடுடல்
மதித்திடு காயம் யாவையும் வசப்பட வேகொ ளாதிய
கணக்கறு சீவ பேதமு மிணக்குறு பாத தாமரை
கடைப்படு பேதை யோர்முடி கருத்துளு மாக வேபுனை
வணித்தரு ளாதி யோநம வரட்டனை யாளு வாய்நம
அருட்பிர காசந மோநம அருட்பிர காசந மோநம. (11)


 அருட்பெருஞ்சோதி    தனிப்பெருங்கருணை

No comments:

Post a Comment