Search This Blog

Friday, August 18, 2017

தொழுவூர் வேலாயுதனார் வள்ளலார் மீது பாடிய "திருக்கழற் சந்நிதி விண்ணப்பம்"

11. திருக்கழற் சந்நிதி விண்ணப்பம்

அருட்பெருஞ்சோதி                          தனிப்பெருங்கருணை

கொடிக்குக்காய் கனங்கொலெனுங் கோலவருண் மொழியும்
குணம்பெறவீங் கிவன்பாலி ரக்கம்வர விலைவெம்
மிடிக்கொருமா மருந்தாம் பொன் னம்பலத்தி னருளால்
விளங்குநடங் காணாத வேற்றுமையா னென்றங்
கடுத்தருளிச் செய்தவரு ளப்பாடும் ஆங்கே
யமலஅருட் கரத்தாலே கைபிடித்த வாறும்
தடித்தமனச் சிற்றேழை யறிகிலேன் அரசே
தவிக்கவிடேல் ஏன்றுகொலாய் சற்குருமா மணியே. (1)

ஆண்டநாள் அஞ்சலென்ற அருட்டிறமும் ஆங்கே
அருண்மொழிமேல் ஒருமொழியின் றெனக்கருளு திறனும்
பாங்குறப்பின் ஆங்காங்கே பருவரல்க ளுறுங்கால்
பரிந்தவரு ளுளப்பாடும் பாவியனை ஈங்கு
வீம்பறவென் மடப்பிள்ளாய் அவதரித்தாய் என்ன
விளம்பியதும் காலனுனை யணுகலிலை யென்ன
வோம்படுத்துச் சொன்னதொரு மொழியும் உண்மை
யுணர்கில்லே னுடையானே கடையேனுக் கிரங்கே. (2)

அன்றொருபுன் கனவினிடை யருளாலே வந்தென்
ஆதரவு னேக்காவாங் குறாவரையென் னுரைக்கும்
நன்றுபொருண் மொழிந்தனை நாடாமே மறந்த
நவைநோக்கா துடையானே! நனவினுநன் கருளி
வென்றிபெறக் கருணைசெய்யும் வேதியனே! துரையே!
வியலுமருட் பிரகாச மேதக்க மணியே!
நின்றுலகம் ஒருமூன்றும் ஏத்தமணி மன்றம்
நின்றவனே குன்றவில்லி நீள்கருணைக் கடலே! (3)

அருட்பெருஞ்சோதி                          தனிப்பெருங்கருணை

-----------------------

No comments:

Post a Comment