Search This Blog

Monday, October 2, 2017

திருவருட் பிரகாசனார் சந்நிதி முறை வாழ்த்து

13. வாழ்த்துத் திருவிருத்தம்

திருவிருந்திடு தெய்வத் தாமரை செய்ய
உருவிருந்திடும் பதமல ருவப்பினென் றலைக்கே
பெருவிருந்திடும் அருட்பிர காசனார் பெருஞ்சீர்
வருவிருந்திடும் வாயதே வாழிநீ டூழி.

அருட்பெருஞ்சோதி                          தனிப்பெருங்கருணை

-----------------------

14. வாழ்த்துத் தனி நேரிசை வெண்பா

ஆரியனார் சீர்பாதந் தாங்க அமைசிரமும்
ஆரியனார் சீர்பாட வாநாவும் - ஆரியனார்
செம்மொழியே சிந்திக்கு நெஞ்சுந் தருந்தவமே
எம்மையினும் வாழ்க இனிது.

அருட்பெருஞ்சோதி                          தனிப்பெருங்கருணை


திருவருட் பிரகாசனார் சந்நிதி முறை முதற்பகுதி முற்றும்.

--------------------

No comments:

Post a Comment